சமீபத்தில் psychologytoday.com என்ற இணையத்தில் உளவியல் பற்றி நான் படித்த ஒரு சுவாரசியமான ஆங்கிலப்பதிவின் தமிழாக்க பதிவு இது.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் என்பதை தமிழில் மதியிறுக்கம் என்றும் மனயிறுக்கம் என்று சொல்கிறார்கள்.ஆட்டிசம் உடையவர்களில் பலர் நாத்திகர்களாக உள்ளனர் என்பதே இந்த பதிவின் சாரம் . ஸ்பெக்ட்ரல் டிஸ்ஆர்டர் என்று ஆங்கிலத்தில் இந்த நோய் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உடையவர்கள்
மற்றவர்களுடன் உறவைப் பேண முடியாது.பொதுவாக ஆட்டிசம் உள்ளவர்களுக்கு பேச்சு வருவதில் சிக்கல் ஏற்படும். சிலருக்கு நல்ல முறையில் பேச்சு வருவதும் உண்டு. ஆட்டிசம் பாதித்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எந்த ஒரு வரையறையும் இருப்பதில்லை.சிலர் தமக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்று உணர்ந்திருக்க கூட மாட்டார்கள்.
————————————————–
ஆட்டிசம் நாத்திகத்திற்கு வழிவகுக்குமா ?
கடவுள் நம்பிக்கை மன கோட்பாட்டை சார்ந்தது.
மாத்தியூவ் ஹட்சன் in சைக்குடு!(psyched)
பெரும்பாலான மதங்களில், மற்றும் விவாதிக்கக்கூடிய தகுதியுள்ள எந்த மதத்திலும் , கடவுள் ஒரு மனித சலனத்திற்கு அப்பாற்பட்ட சக்தியோ அல்லது படைப்பாளியோ இல்லை. மனிதன் தொடர்புகள்ளக்கூடிய மனதினைக் கொண்டவன்.ஒருவேளை நீங்கள் அவருடன் பின்னிரவில் தொலைபேசியில் அரட்டையடிப்பதில்லை.ஆனால் அவர் தனிமனித பண்புகளும் ,எண்ணங்களும்,மனநிலையும், உங்களுடன் தொடர்புகொள்ளவேண்டிய வழிகளும் கொண்டவர். நீங்கள் மனமென்றால் என்ன ?அது எவ்வாறு இயங்குகிறது? என்று அறியவில்லையென்றால் ,மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது,கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது ,மத விருப்பம் இல்லாதவர்களாய் இருப்பீர்கள்.
அது ஒரு கோட்பாடுதான் .மதத்தினை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் , கடவுள்(கடவுளர்கள்) மீதுள்ள நம்பிக்கை தினசரி சமூக ஆற்றலை (நமது திறன், நாட்டம் மற்றும் மனங்களை பற்றிய நினைப்பு) நம்பியுள்ளது என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் ஒரு ஆட்டிசம் உடையவராகவோ அல்லது ‘மனத்தினைப் புரிய இயலாதவராகவோ ‘ இருந்தால் நீங்கள் ஒரு நாத்திகவாதி .’பிளாஸ் ஒன்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி ஒன்று இந்த கூற்றுக்கான புதிய ஆதாரங்களை வழங்குகிறது .
ஆனால் முதலில் தற்போதுள்ள சான்றுகளைப் பார்ப்போம் !
வாழ்க்கைப் பயணமிது
சிறகுகள் தேவைப்படுகிறது
ஒவ்வொருதருனத்திலும்
ஒவ்வொருவிதமாக!
கதகதப்பில் அரவணைக்கப்பட்டுகிடக்க
வலுசேர்த்து
மேலும்பறக்க
மிதியடியாய் சிலநேரம்
கனவுகள் நினைவாக்க சிலநேரம் …
தாய் தகப்பனிடம்
கூட்டுக்குள் கிடைக்கும்
சகோதர
பாசத்தில்
பங்கு கொள்ளும்
ரத்தமெனும் சிறகு!
உற்றார் உறவினரிடம்
தோப்புக்குள் கிடைக்கும்
பந்த பாசத்தில்
தழுவிக் கொள்ளும்
சொந்தமெனும் சிறகு!
வகுப்பறைத் தோழனென
கூடத்தில் கிடைக்கும்
தோள் சாய்ந்து
கற்கும் நன்றாய்
தோழமைச் சிறகு!
அடுத்த நாள் படகு சவாரிக்கு ஆயத்தமானோம்….(JLR resorts)விடுதி மேலாளர் எங்களிடம் இங்கு உங்களுக்கு அதிர்ஷ்டமென்றால் சிறுத்தைகளை மற்றும் புலிகளை காணமுடியும் என்றார்.நான் அப்பாவியாய் பன்னர்கட்டா ஜூவில் நிறைய புலிகள் பார்த்திருக்கிறேன்,வெள்ளைப்புலிகள் கூட பார்த்திருக்கிறேன் என்று சொல்ல ,அவர் முகத்தில் கோபம் படர்ந்தது :D.ஆம் கூண்டில் அடைத்து ரோட்டி துண்டு போல் மாமிசம் கொடுத்து வளர்க்கப்படும் புலிகளுக்கும்,காட்டில் டெர்ரராய் விலங்குகளை வேட்டையாடி வாழும் புலிக்கும் வித்தியாசம் உண்டுதான் !
அந்த விடுதி முன்னொரு காலத்தில் வேட்டையாடுவதற்கு மைசூர் மகாராஜா தங்கியிருக்கும் இடமாம் . கபினி அணைக்கட்டின் ஆற்றேரக்குட்டை(backwaters) கரையில் விடுதி அமைந்திருந்தது .இந்த மூன்று மணி நேரப் பயணம் தரப்போகும் அனுபவங்களை எதிர்நோக்கி சூரிய உதயத்திற்கு முன் படகில் சில வெளிநாட்டு பயணிகளும் ஒரு கைடுமாக(guide) அமர்ந்தோம். அந்த கைடுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மறக்கமுடியாத நினைவுதான்.இந்த காட்டுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் கண்ணில் படும் சொற்ப காட்சிகளும் நமக்கு தரும் ஆச்சிர்யத்திற்கும் பிரமிப்புக்கும் ஈடு இணையே இல்லை. national geography,animal planet,discovery channel பிரியர்கள் நிச்சயம் சபாரியை(safari) (இழக்கக் கூடாது.
குளிரில் நடுங்கும் காட்டிற்கு கதகதப்பு தருவதற்காக இயற்கை அன்னை சூரியனை மூட்டிவிட்டது போன்று,மெதுவாய் சூரியன் எழுந்து கொண்டிருந்தது .. அங்கு அந்த நீரில் இருந்த சில இறந்த மரங்களில் (dead woods)பறவைகளும் குளிர்காய வந்திருந்தன ………. நாங்களும் பக்கத்தில் தெரியும் கிராமத்தின் கொல்லைப்புறத்தையும் ,கபினி கரையோரத்தில் இருக்கும் மற்ற விடுதிகளையும் பார்த்து கொண்டே எழில் மிகுந்த மரங்களையும்,வரிவரியாய் அசைந்து செல்லும் நீரழைகளையும் ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தோம். Read the rest of this entry »
மற்ற கொரியன் நாடகங்களிலிருந்து சிறிது மாறுபட்ட நாடகம் அதிகம்.பொதுவாக கொரியன் நாடக பிரியர்கள் அதன் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்த கூடிய நட்பு, நிறைய காதல் கொஞ்சம் சோகம் இவற்றால் கவரப்படிருப்பர்.இதில் இன்னொரு வகை ஓவியத்தின் அழகுணர்ச்சியும்,அவர்களது கலாச்சாரமும் அதிகமாய் ஈர்த்து விடும் .இதில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நூறு சதவிகிதற்கும் மேலாக ரசிகர்களாய் உணர்ந்து கொண்டிருப்போம்.நிச்சயம் இந்த படம் ரசிகர்கள் பலரை,
1)ஒவியார்களாக்கி இருக்கும் 2)படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் மரியாதையை ஏற்படுத்தி இருக்கும் 3)நமக்கு ஏன் ஓவியத்திறமை இல்லை என்று வருந்த வைத்திருக்கும்.
இதில் ஒரு பெண்தான் ஹீரோ .அதுவும் நமது மூன் கங் எங் அதாங்க மை லிட்டில் பிரைட்,இந்த பெண்ணின் நடிப்பால் நம்மை மறுபடியும் ஈர்த்துவிட்டார்.ஓவியருக்கு பிறந்த ஓவியம் …துடுக்கான ஓவிய பள்ளி மாணவன்,ஏன் அவள் மாணவன் ஆனான் எப்படி ஒரு ஓவியம் அவள் வாழ்கையை எனும் கப்பலை திசை திருப்புகிறது ,ஒளி விளக்காய் ஒரு ஆசிரியர் கிடைக்க போய் சேர வேண்டய இடத்திற்குத்தான் போய் சேர்ந்ததா என்பது தான் கதை.
ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தமாய் வாழ்ந்திருக்கின்றன.ஆர்ப்பாட்டமாய் முகபாவனைகளும் சம்பந்தம் இல்லாத உரத்த உரையாடல்களும் இந்த நாடகத்தில் இல்லவே இல்லை.
இதில் அனைவரும் நடிப்புமே எதார்த்தமே ……இதில் நட்பு,காதல்,பாசம்,குரு பக்தி என்று உறவுகளின் அனைத்து உன்னத உணர்ச்சிகளுக்கும் உயிர் தந்திருக்கிறார்கள்.அவர்களது பண்டைய கலாசாரத்தின் மீது நம் மதிப்பு இன்னும் உயர்கிறது.
இதன் கதை உங்களுக்கு ஆயிரம் தளங்களில் கிடைக்கும்.அதனால் நான் சொல்லவில்லை.இந்த நிமிடம் கூட உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இந்த நாடகம் பார்க்கபட்டு கொண்டிருக்கும்.
1)சின் யூன்புக்காக நடித்திருக்கும் நமது குட்டிப் பெண்(துடுக்கான பார்வையும்,ஓவியம் வரையும் பொழுது தெரியும் ஆர்வமும்,பெண்ணாக வெட்கப்படும் நேரங்களிலும் ..இந்த மாடர்ன் ஆர்ட் ஈர்க்கிறது).
2)சின் யுன் மீது காதலில் விழும் அழகும் திறமையும் நிறைந்த விலை மாது(அழகாக இருக்கிறது அவரது மொழியும் ,பாவனைகளும் இந்த அழகிய பெண் ஓவியத்தின் மீது காதலும் இரக்கமும் ஏற்படுத்துகின்றன ).3)வில்லியாக வரும் மா மா (ஆர்பாடமில்லாமல் கண்களிலும் உதடுகளிலும் வெறுப்பை எற்படுதிருக்கிறார்).
4)சின் யூன் புக்கின் அண்ணன் (குட்டிபெண்ணுக்கு அரணாகவும்,தங்கைக்காக தந்து உயிரையும் கொடுத்து நமது அன்பையும் அனுதாபத்தையும் பெறுகிறார்).
5) வாத்தியார் சின் யுங் (திறமையை மதிக்கும் திறமை சாலியான குரு,அரசரிடம் மாணவனுக்காக வாதாடும் போது அவர்மேல் உள்ள மதிப்பை உயர்த்துகிறார்) .
6)மதிப்பிற்குரிய அரசர் (தந்து தந்தையின் மீதுள்ள அன்பையும் பாட்டியின் வஞ்சனைகளை உணர்ந்து ,எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீதி கூறாமல்,உண்மைக்கு செவி கொடுக்கிறார்,திறமை சாலிகளை மதித்து,அவர்களின் ஓவியத் திறமையினைக் கொண்டு செம்மையான ஆட்சி எப்படி செய்கிறார் என்பது நமக்கு புதுசு தான்).
இது போக ஓவியப்பள்ளியில் நண்பர்கள் கூட்டம்,பொறாமைப் படும் கூட்டம் என்று பல வகை அரசியல்களை (திறமை சாலிகள் எப்படி அமுக்கப்படுகின்றனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள்.
இந்த படத்தினால் கதாசிரியரையும் ,அதற்கு மெனக்கட்டு உயிர் தந்த இயக்குனரையும் ,வாழ்ந்திருக்கும் நடிகர்களையும்,அட்டகாசமான பின்னணி இசையும்,பிரமிப்பூட்டும் ஓவியங்களையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் .
காலத்தால் அழியாத காவியமாய் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை :p!
கலை ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் !
தரவிறக்கம் செய்ய (20 series)
இந்த பதிவு நான் கடந்த வாரம் சென்று வந்த நாகர்ஹோலே தேசிய பூங்கா மற்றும் கபினி ஆற்றேரக்குட்டை(backwaters) காட்டு பகுதியில் வாழும் சில முக்கிய விலங்குகள் மற்றும் பறவைகளின் குணாதசியங்களை பற்றிய கட்டுரை !
கடலோரப் பகுதிகளும் அருவிகள் நிறைந்த மலைப்பகுதிகளைத் தவிர்த்து காட்டுப்பகுதிக்குள் செல்லலாம் என்ற எண்ணத்திற்கு காரணம் இருக்கிறது! அது தான் ஒரு காணொளி ! ஆம் காட்டு ராஜா என்று சொல்லப்படும் சிங்கங்கள் வேட்டையாடிய உணவை எப்படி மனிதர்கள்(ஆப்பரிக்க காட்டுவாசிகள் என்று நினைக்கிறேன் ) தைரியமாக எடுத்து செல்கின்றனர் என்பது பற்றிய காணொளி! மிரண்டு போய்விட்டேன் !!!!
காடே அதிர கர்ஜிக்கும் ,”ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டுடா” என்று மிரளவைக்கும் பூனைக்குடும்பத்தை சேர்ந்த சிங்கங்களை ஒற்றைக் கம்பும் ,நேர்கொண்ட பார்வையுடன் அது வேட்டையாடிய உணவை அந்த மனிதர்கள் அபகரித்துவிட்டு ,சிங்கங்களை சட்டைசெய்யாமல் திரும்பிகூட பாக்காமல் அந்த மனிதர்கள் எடுத்து சென்ற தோரணை ! ,எத்தனை பெரியவன் மனிதன் என்ற நினைப்பைத் தந்ததற்கும் மேலாக , நாமும் அந்த விலங்குகளுடன் வாழ்ந்து வந்த ஆறு அறிவுகளைக்கொண்ட ஒரு விலங்குதான் என்ற நினைப்புதான் வந்தது !
இந்த காணொளி ஏன் நாமும் ஆபரிக்க சபாரி செல்ல முடியாவிட்டாலும், அருகில் கபினிக்கு செல்லக்கூடாது???? என்ற நினைப்பைத் தந்தது !
முதல் நாள் அடர்ந்த நாகர்கோலே காட்டுபகுதியில் சர்வ சாதாரணமாய் புள்ளி மான்களைக் காண முடிந்தது ….அவை ஏன் காட்டுக்குள் அடர்ந்த பகுதிக்குள் வாழாமல் ,சாலை ஓரத்தில் புட்களைக் கூட்டம் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன ….அடிக்கடி மகிழுந்துகளையும்,பேருந்துகளை பார்க்கின்றன போலும் ,மருட்சியுடன் காமெராவுக்கு போஸ் கொடுத்தன ,உண்மையில் அவற்றிற்கு பாதுகாப்பான இடம் அடர்த்தி குறைந்த புல்வெளிகள் தான் ,மறைந்திருந்து புலிகளும்,சிறுத்தைகளும்,காட்டு நாய்களும் அவற்றை தாக்காமலிருக்க உதவும்.
]
அப்புறம் யோகிகள் போல காட்சியளிக்கும் ஹனுமார் லண்கூர்களைப் மரத்துக்கு மரம் பார்க்க முடிந்தது ,அவையும் பரம சாது இன்னும் அதற்கு மனிதன் கோக்ககோலாவும் லேஸ் சிப்சும் தந்து பழக்கவில்லை , அதனால் தானுண்டு தன வேலையுண்டு என்று இருந்தன!. பல்லாண்டுகளுக்கு முன் பாத யாத்திரை செல்லும் துறவிகளுக்கு உறுதுணையாக அவர்களின் மூட்டையைக் கொண்டுவந்தும் கொடிய விலங்குகள் வந்தால் எச்சரிக்கவும் செய்திருக்கிறது ,இந்த குரங்குகள் இவை அந்த மான்களுக்கு மரத்திலுள்ள பழங்களை உளுப்பிவிட்டு உதவி செய்யுமாம் , மேலும் கொடிய விலங்குகள் வந்தால் மரத்திலிருந்து(உயரமான மரங்களில் கூட ஏறி தனது அசாதாரமான பார்வைத்திரனால் அன்னியர்களையும்,கொடிய விலங்குகளையும் கண்டுகொள்ளுமாம்), மான்களுக்கு எச்சரிக்கை தருமாம்.மானும் தனது அசாதாரமான நுகரும் திறன் கொண்டு சிருத்தலை புலிகள் வந்தால் எச்சரிக்கை தருமாம்.
நாங்கள் கபினி காட்டில் பார்த்தது,ஒரு யானை உப்பிர்காக மண்ணை மேய்ந்துகொண்டிருந்தது,யானைகளுக்கு பார்வைத்திறன் குறைவு,அருகில் எங்கள் ஜீப் இருந்தும் அது கவனிக்கவில்லை, எங்கிருந்தோ வந்த ஹனுமார் லங்கூர் மெதுவாக அந்த யானையை எச்சரிக்கை செய்தது …சத்தம் எழுப்பியதா என்று தெரியவில்லை ..அந்த யானை சட்டென்று புதருக்குள் ஓடி மறைந்தது. இத்தனை நல்ல குரங்குகள் மரம் ஏறும் சிறுத்தை புலிகளுக்கு இரையாவது சோகம் 😦
அடுத்து இரவில் வனப்பகுதியில் பைசன்களின் கூட்டம் ,நமது வாகனத்திலிருந்து வெளிவரும் விளக்குவேளிச்ச்காத்தில் அவை கண்கள் ரத்தசிவப்பாக தெரியும், கால்களில் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்தது போன்று இருந்தது,இரவில் வெளிவரும் குணத்தைக்கொண்டது ,எருமை மாடு போன்று சோம்பேறியாக தோன்றினாலும்,கூட்டமாக சேர்ந்து வாகனங்களைத் தாக்கிய கதைகள் பல சொன்னார்கள் .
சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக :
மேலும் அழகிய பறவைகளும்(மரங் கொத்திகளும் ,மயில்களும்,மீன் கொத்தி பறவைகளையும் ,தேனீ உண்ணும் பச்சைக் குருவியும் ஆங்காங்கே காணப்பட்டன ).அவை எழுப்பும் ஒலி எதிரொலித்து அந்த காட்டுக்கு ஒரு ரம்யமான சூழலைத் தருகின்றன.
இதில் தேனீ உண்ணும் பச்சைக்குருவி மனிதனின் மன ஓட்டத்தை அறியும் திறன் கொண்டவையாம்,அவர்களால் அபாயமா இல்லையா? என்று தெரிந்து கொண்டு,தனது கூட்டை காட்டிக்கொடுக்கதவாறு நடவடிக்கைகளில் ஈடுப்படுமாம். மண்குளியல் என்றால் அலாதிப் பிரியம் !!
மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால்,ஆங்காங்கே வாழும் பறவைகளும் ,விலங்குகளும் அந்த அந்த இடங்களில் இருக்கும் மரங்களின் நிறத்தை ஒத்திருந்தன !இல்லை மறைந்து வாழ தனது தோலின் நிறமுடைய இடங்களுக்கு குடிபெயர்ந்தனவா என்று தெரியவில்லை !
இப்படி காட்டுபகுதிக்குள்ளேயே ஆச்சிரியங்களும் அனுபவங்களும் கொட்டிக்கிடக்க மறுநாள் அதிகாலை கபினியில் இன்னொரு அனுபவமும் காத்திருந்தது ! அடுத்த பதிவில் ………
இன்றும் வானம் வெயிலில் கிடந்து
கருத்து போன வேளை அது…..
இன்றும் நானும் நிலவும் சந்தித்து
கொள்ள முடிவெடுத்த இனிய கணம் !
என்னவள் நிலவுக்கு நான் வாங்கித்தரும்
ஐஸ்க்ரீம் என்றால் கொள்ளை பிரியம்
இரவெல்லாம் என்னுடன் பேசிக்கொண்டே சிந்தும்
கொஞ்சம் ஐஸ்க்ரீம்பனி ….எனக்கு சுவர்க்கம்
அவளும் என்னை சுற்றிவரும் நேரம்
காதல் வளரும் தேயும் நிழலாய்!
அவள் உலா வரும் பொழுது
அவள் ஆடையிலிருந்து சிதறும்
நட்சத்திர கற்களை பொருக்க ஒரு
கள்ள மேக கூட்டங்கள் தொடரும்…..
அவைகளை சிறை பிடித்து , இன்றும்
நான் காப்பாற்ற முத்தம் தருவாள்
சூரிய முத்தம் !சூடான முத்தம்!
Img src
எங்கேயும் எப்போதும் கவனம் தேவை இல்லைனா…… கடைசியா சொல்றேன்
படம் பெயரே தெரியாம படத்தோட கதைகூட தெரியாம தியேடருக்கு போய் பார்த்த படம் …அதனால தானோ காதலும் சிரிப்புமா போய் கொண்டிருந்த திரைக்கதை மரணமும் அழுகையுமா மாறியதை ஏற்றுக்கொள்ள சில நிமிடங்கள் ஆனது நாட்கணக்கில் மனதிலேயே நின்றுகொண்டிருக்கிறது.இது போன்ற முதல் பாதி சுமூகமாயும் அடுத்த பாதி அழுகையாகவும் இருப்பதும்,அப்படிபட்ட படங்கள் பெருத்த வெற்றி பெறுவதும் வழக்கம் தான்.ஆனால் இதுவரை நாம் பார்த்த படங்களில் நாம் நம் நிஜ வாழ்வில் காண்பதும் எதிர்கொள்வதும் மிகக் குறைவு ,எடுத்துக்காட்டாக மைனா,சுப்ரமணியபுரம் .ஆனால் இதிலோ இந்த உலகத்தில் அத்தனை மனிதனின் வாழ்விழும் ஒன்றாகி போன சாலைப் பயணம்.சமீபத்தில் நடந்த பேருந்து விபத்துகளை மிகவும் நேர்த்தியாக கண் முன்னே காண்பித்து ,ஒவ்வொருவரின் மனத்திலும் பாடம் புகட்டி உள்ளனர்.
இப்பொழுதெல்லாம் விபத்துகளைப் பற்றி நாளிதழ்களில் படிக்கும் பொழுது மரணங்களின் எண்ணிக்கைகள் வைத்து வருத்தப்படும் நிலைமையில் இருக்கிறோம்.ஆனால் ஒவ்வொரு மரணத்தின் பின்னாலும் அவர்களின் அவர்கள் மீது அன்பு கொண்டோரின் கனவுகளும் எரிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.இதில் ஒவ்வொரு மரணத்திற்கு பிறகும் ஒரு உயிர்க்காவியம் சிறுகதையாய் சொல்லப்பட்டிருக்கிறது.மரணத்திற்கு பிறகும் வாழ உடலுறுப்புகள் தானத்தின் உன்னதத்தையும் எளிமையாய் சொல்லியிருக்கிறது.சில மணிநேரம் பிரயாணத்தில் ஏற்படும் பரிமாறல்களும் அன்பும் மனிதமும் கண்முன்னே வரையபடுள்ளது.
வாழ்க்கையில் அனைத்தையுமே மிகவும் நம்பிக்கையோடு கணக்குபோட்டு வாழும் ஒரு பெண்ணின் உறவும் ,ஒரு நாள் சந்தித்துக்கொண்ட உறவை தேடும் ஒரு பெண்ணின் நம்பிக்கையும் ் ஒரு பேருந்து விபத்தில் சிதைவதும் ,இணைவதுமே களம்.சாதாரணமாக நாம் செய்யும் காணும் விசயங்களை கவிதையாய் சொல்லி மெலிதாய் சிரிக்கவைத்திருக்கிரார்கள் .அழகான காதல் கதைகள்,உன்னதமான பிள்ளைப் பாசம் ,விதியால் தொடரப்பட்டு உடைக்கபட்ட அத்தனை உறவுகளின் வாழ்கையையும் சில மணிநேரங்களில் நாமே வாழ்ந்து முடித்தது போல் கனத்த இதையத்தொடு தான் வெளியேறுகிறோம்.
ஒரு சரித்திரம் மறுபடியும் தொடருமானால் , மனிதன் எத்தனை ஆற்றலற்றவன்..எத்தனை அசாகிரத்தை உள்ளவன் ,இன்னமும் தொடர்கிறது ஆளில்லா ரயில் விபத்துகள்,வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விமான விபத்துகள்,இன்னமும் இருவழிசாலை விபத்துகள்….இதுக்கு என்னதான் தீர்வு நாம ,சாலை விதிகளையும் நாகரிகங்களையும் அறிந்து நடப்போம்.
எங்கேயும் எப்போதும் கவனமும் நிதானமும் தேவை இல்லைனா கோவிந்தா கோவிந்தா ……….
Hello World!
Time is running fast!yeah !!!!!!!! My Blog is now three year’s old!!I have been blogging for three years since oct 2007.At that time I didn’t have any idea about blogging,It’s a kinda free website ,we could post any information,our likes,fav artists,books etc etc…no need of papers,inks,post cards , stamps,telephone call to local radio channel .We r the authors ,the reviewers!!! that’s all I was aware about it.I always like to learn myself despite of how many trials and errors,because i believe in self learning ~everlasting one!.After all I am a being in search of meaning!!!!
At that time the blogspot was restricted in my college(TCE) where i did my under graduation.. obviously i chose wordpress!!!!!Started with borrowed news,weird thoughts,worst writing style…It’s a social diary!!!!!Now looking back@my posts..how many errors..shyyyy:D how much changes in my thoughts….Unlike personal diaries,it triggers our creativity,our communication with the world.Now my blog s with two siblings Mangaimano’s thoughts and Y!flickr!(hope ” ll start photo blog too).Thanks to blogs!.It actually refining my thoughts and expressions !!!
Now It helps me to keep in touch with my colleagues,friends (Planet.tce.edu)and with my favourite bloggers.Because of facebooking twittering ,the blog number s reduced considerably.Hope I will make some worthy posts soon(this s for the daily visitor of my blog:P) !!!!Thank you longtime readers/visitors of my blog !
Happy Diwali!!!!bye……
Indian Information and Communication ministry announced our Indian currency symbol among controversies .We Indians Hem hmm Human beings always likes to create controversies and of course sometimes it helps to realize and enhance the standards.Lets see about our Indian currency symbol
Why we need our own currency symbol
1)An unique identity
2)It shows the country’s robustness of the economy
3)Strengthens our economy
4)Favours the global investments and recognition
5)Increases the economical activities.
6) Positively affects the FII and theFDI.
The new symbol has to be accepted by the Unicode Consortium’s Unicode Technical Committee that is responsible for the development and maintenance of the Unicode Standard,Probably it will be adopted within 18-24 months globally.The new sign is a amalgam of the Devanagari “र” and the Roman capital “R” without the stem. The parallel lines at the top (with white space between them) make an allusion to the tricolor Indianflag
The symbol will also be included in the Indian Standards, viz. 13194:1991 – ISCII (Indian Script Code for Information Interchange), through an amendment to the existing list by the Bureau of Indian Standards.
The new symbol has to be accepted by the Unicode Consortium’s Unicode Technical Committee that is responsible for the development and maintenance of the Unicode Standard. The symbol will also be included in the Indian Standards, viz. 13194:1991 – ISCII (Indian Script Code for Information Interchange), through an amendment to the existing list by the Bureau of Indian Standards. The ISCII specifies various codes for Indian languages for processing on computes along with the key-board lay outs.
Congratulations to Mr. Udayakumar Darmalingam who designed this symbol.
source:
1)EconomicTimes
2)http://pib.nic.in/release/release.asp?relid=63284
Crunchies:
http://www.saveindianrupeesymbol.org/
Hello Readers,
I am coming back after a long time…..restarted the novel reading.Last week I noticed a book named “The Inheritance of Loss ” Man Booker prize Winner (2006) by Kiran Desai in my cupborad.No movies to watch,hate to take text books ..huffff……Bored to the core ,so I started to read the book and finished it yesterday.And now I am here to blog it in my simple words.
The Novel start like this Sai an orphaned teenage girl, moving to her grandfather Jemubhai (a retired judge) who wants to live a peaceful life in Kalimpong at the foothills of the Himalayas.Thes tory runs in two parallel segments. One, that of the judge and Sai and their life in Kalimpong which is on the verge of a Gorkhali insurgency in demand for a separate state for themselves – Gorkhaland. The second is that of Biju Sai’s son illegal immigrant in New York.The novel touches the everything from coloniaism, globalization to terrorism and the different views on Indian life.
Although he was a retired Independent Indian Government official ,racial abuse, humiliation that he encountered in cambridge University(where he studied) , abuse for his young wife Nimi evolve the intense damage to his self esteem continues to haunt him:(.He hates the western life .The other characters are he Anglophile sisters Lola and Noni ,father Booty, a Swiss national residing, illegally in India and Uncle Potty a heavy drunkard.Although it seems to be a chaotic novel ,there are true forms love and family bond!Both poverty and prosperty .It covers everything a reader expect from a book.A book to all and worth reading!
(-: I killed my boredom by writing this review LOl
நாம் அனைவரும் சமீபத்தில் வந்த ஐடியா மொபைல் விளம்பரத்தைப் பார்த்திருப்போம் ரசித்திருப்போம்.அதாங்க அபிஷேக் பச்சன் ஆலமரமா வருவாரே விதம் விதமா அனிமேசன் விசயங்களோட வருமே(மேலே படம் இருக்குறத மறந்துட்டேன்!).(டீக்கடைல இருந்து பாஸ்போர்ட் வரைக்கும்)காகிதத்துக்கு பதில் இனிமே மொபைலையே பயன்படுத்தலாம்னு .. இப்படி மனுஷன் ஐடியா பண்ணி பண்ணியே தான் இயற்கையை அழிச்சுட்டு வருவான்..நம்மளும் புதுசா எதைச் சொன்னாலும் தலையாட்டி ஒத்துக்குறோம் .பகுத்து அறிய நினைக்கமாட்றோம்
நான் சொல்ல வரது என்னனா ஒரு வேலை இவங்க சொல்லுற மாதிரி மரங்கள காப்பாத்தலாம் அப்புறம் அதுல ஒக்காரதுக்கு பறவைகள் இருக்காது,மலர் செடிகள் இருக்காது ,கூடு கட்ட தேனிகள் இருக்காது..ஆமாங்க மொபைல் வந்ததுலருந்து அதுவும் உங்க வீட்டு பக்கம் மொபைல் டவர் வந்ததுலருந்து சிட்டு குருவிய பாத்துருக்கீங்களா? பலகோடி தேனீக்கள் காணாம போயிடுச்சாம் .செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகளையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .தேனீக்கள் போன்ற உயிர்கள் அழிந்தால் எப்படி இனப்பெருக்கம் நடக்கும்,செடி கொடிகள் வளரும் மொத்த விலங்கியல் சம நிலையும் (Ecological balance) பாதிக்கப்படும்.அதுகிடக்கட்டும் ஏற்கனவே மின்சாரம் பற்றாக்குறை:( இவ்வளவு மொபைலுக்கு எப்படி சார்ஜு போடுவீங்க????..இப்படி எதையும் கருத்தில் கொள்ளாமல் விளம்பர நோக்கிற்காக ஒரு விஷயம் அதை சொல்ல ஒரு திரைப்பட நாயகன்,அனிமேஷன் வெளிப்பூச்சு …..அணுகுண்டு கண்டுபிடிச்சுட்டு வருந்தும் மனிதன் ,மொபைலுடன் பிறந்து, வளர்ந்து ,உறங்கி அனுபவித்துக் கொண்டிருக்கும் மனிதன் அதற்காகவும் வருத்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
“Use mobile Save Paper” இவ்வாறு கூட மாறலாம் Don’t use mobile Save Yourself(what an idea Humanji!)
——————————————————————————————————————————
Color Image source:http://aishwaryaraifanclub.net
நன்றி :குமுதம்(oct 2009)- “தேனீக்களைக் காணவில்லையாம்“
————–
ஈகரை கவிதைப் போட்டி!
ஈகரை கவிதை போட்டி நடந்து முடிந்தது ! ஆரம்பமே அமர்க்களம்!முதல் பரிசு எனது கவிதைகளுக்கு !
அன்புள்ள ஈகரைக்கும்,தேர்வுசெய்த உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள் !
மேலும் மேலும் ஈகரை இணையதள தமிழ் சேவையைத் தொடர்ந்து வானுயர வளர எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள் !
நிலாசகி என்ற மங்கையர்க்கரசி
The hottest thing on the Internet is not social networking websites like Facebook and Twitter, but Flickr-the popular photo-sharing portal – and the proof is: it has topped TIME’s list of the best 50 websites this year.
One of the noticeable trends in this year’s list, which was released this week, was on-demand video services, like YouTube, Vimeo and US services Hulu and Netflix.
However, the top two in the list were related to photographs, with California Coastline following Flickr at the second spot.
You must be logged in to post a comment.